தலையங்கம்

ஒவ்வோர் ஆண்டும் தமிழ்மொழி மாதத்தின் நிகழ்ச்சிகள் அதிக எண்ணிக்கையில் மேடையேறுகின்றன. இவ்வாண்டு,  47 நிகழ்ச்சிகள் இடம்பெற்றன என்று வளர்தமிழ் இயக்கத்தின் இணையத்தளம் கூறுகின்றது. 
பிரதமர் என்ற முறையில் தமது இறுதிப் பேருரையை மே தினத்தன்று ஊழியரணியின் முன்னிலையில் ஆற்றினார் பிரதமர் லீ சியன் லூங்.
பருவங்கள் மாறி மாறி வருகையில் ஏதோ ஓர் இடத்தில் தொடங்கி மறுபடியும் அவ்விடத்தையே அடைகிறது என்பதைக் கண்கூடாக அறிய முடிகிறது. தொடக்கமென்பது ஒரு மறுமலர்ச்சியை, புத்துணர்வை, மகிழ்ச்சியைக் கொடுக்ககூடியதாக அமைவதையே மனம் விரும்புகிறது. குளிர்காலம் முடிந்து, தாவரங்கள் துளிர்க்கும் காலம், மலர்கள் பூக்கும் காலம், ஆதவனின் கதிர்கள் பூமிக்கு இதமான வெப்பத்தைப் பரப்பும் காலம் இளவேனிற்காலம். அதுவே தொடக்கமெனப் பல்லாண்டு காலமாய் மனத்தில் தோன்ற சித்திரையே முதல் மாதமானது. நம் கலாசாரத்திற்குத் தெரிந்தது இம்மாதங்கள்தாம். இதனைத் தவிர்த்து, ராசிகளின் அடிப்படையில் மாத வரிசைகள் அமைவதும் உண்டு. அவையும் சித்திரை மாதத்தில்தான் தொடங்குகின்றன. 
எல்லா நன்மைகளும் பெற்றிருக்கும் சிங்கப்பூரில் முன்னெப்போதும் இல்லாத எண்ணிக்கையில் மாணவர்கள் தமிழ் படிக்கிறார்கள்.